![]() | |
பிரான்ஸில் பெத்தான்கூர்
ஃபார்க் கிளர்ச்சிக்காரர்களால் 6 வருடங்கள் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட கொலம்பிய அதிபர் தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரான இன்கிரிட் பெத்தான்கூர் அவர்கள், தான் வளர்ந்த பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த தருணத்துக்காக தான் 7 வருடங்கள் காத்திருந்ததாகவும், பிரான்ஸுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
அவரது மீட்புக்கான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்காத போதிலும், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்துவந்த, ...
பாகிஸ்தானில் செய்தியாளர் இருவர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளனர்
ஆப்கானிய எல்லைக்கு அருகேயுள்ள ஒரு பழங்குடியின மக்களின் பிராந்தியத்தில் வைத்து பாகிஸ்தானிய செய்தியாளர்கள் இருவரை தலிபான் போராளிகள் கடத்தியுள்ளனர்.
சுயாதீன நிருபரான ஸுபைர் ஷா மற்றும் புகைப்படப்பிடிப்பாளரான அக்தர் சும்ரோ ஆகியோரை மொஹ்மண்டில் வைத்து வியாழக்கிழமை பிற்பகலில் அவர்கள் கடத்தியுள்ளனர்.
தலிபான்களின் அனுமதியில்லாமல் அவர்கள் புகைப்படங்களைப் பிடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
அவர்களை விடுதலை செய்வதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக அங்கு பல ...
சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா
முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் நடந்துவரும் ...
நன்றி: திரட்டி.காம்: தமிழ்மணம் கருத்தரங்கு - சுவரெட்டி
ரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு
|
|
|
| ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் |
ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ...